வடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது
உலகையே உன் பார்வையால் பார்த்தேன்
நீ காதலித்தவற்றை காதலித்தேன்
நீ வெறுத்தவற்றை வெறுத்தேன்
உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே நோக்கினேன்.
உன்னை பற்றி மணிகணக்காக பேசினேன்
கவிதை, காதல் தொடக்கம் 
காமம் வரை உன்னிடம் அறிந்தேன்
இன்றும் அதேயளவு உன்னை காதலிக்காவிடினும்
என் மனதில் ஒரு மூலையில் ஒரு நிரந்தர நாற்காலி
போட்டு அமர்ந்திருக்கிறாய்
ஆனால் உன்னை முன்னரை போல் வியக்கவியலவில்லை
காரணம் அது அறியா பருவம்
இன்று நீ பிடிக்கும் பல காக்காக்கள்
எமக்கிடையிலான தூரத்தை அதிகரிக்கின்றன.
ஆனாலும் என்னை 
அமானுஷ்ய உலகத்தில்
நடக்க வைத்தவனே
தமிழை காதலிக் வைத்தவனே
வடுகபட்டிகாரனே !

உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இன்னும் பல காலம் வாழும்
வாழ போகும்
உன் தமிழ் போலவே 
நீயும் பல்லாண்டு வாழ
நீ நம்பாத நான் நம்பும் 
இறைவணை வேண்டுகிறேன்

இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை நாட்கள் உன் பாடல் கேட்டு தூங்காமலிருந்திருக்கிறேன்
எத்தனை முறை இசை என்பது இவ்வளவு இனிமையானது என
உணர்த்தியிருக்கிறாய்.
அடுத்த வீட்டுக்கு சென்றாலே
ஆங்கிலம் பேசி தாய் மொழி மறக்கும்
மக்கள் அதிகமுள்ள காலத்தில்
உலக மேடையில் உன் தாய்
மொழியால்
நன்றி சொன்னவன் நீ...
நிறை குடம் தளம்பாது என்பதை
நான் உன்னில் கண்டு கொண்டேன்..
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை
என உலகுக்கு காட்டியவன் நீ
எல்லாரும் செய்வதை நீயும் செய்திருந்தால்
ஆயிரத்தில் ஒருத்தானாய் லட்சத்தில் ஒருத்தானாய்
இருந்திருப்பாய்....
எதையுமே தனித்து, ரசித்து செய்தவதால்
உலகுக்கே ஒருத்தனாய் மாறி விட்டாய்...
உன் மீது விழும் விமர்சனங்களுக்கு
புன்னகையாலும், நன் இசையாலும்
பதில் சொல்லுகிறாய்...

உன்னளவிற்கு நான் யாரையுமே வெறித்தனமாக
பின்பற்றியதில்லை, என்றைக்குமே நீதான்
என் ஹீரோ..

அல்லா ரக்கா ரஹ்மானே...
உனக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இன்னும் பல்லாண்டு காலம்
நீயும் உன் இசையும் வாழ
”எல்லா புகழும் கொண்ட இறைவனை”
பிரார்த்திக்கிறேன்

Happy Birthday Ar Rahman Sir.

நட்பு தின வாழ்த்துக்கள் தோழா(ழி)



பிரிந்து போன நட்பினை கேட்டால்
பிரியமான கதைகள் சொல்லும்..
பிரியமான காதலும் கூட பிரிந்த
பின் ரணமாய் மாறும்...
நட்பு நட்பு தான் காதல் காதல் தான்...

எனக்கு என்றுமே பிடித்தமான இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைகள் ஏராளம் ஏராளம், உன் நண்பனை காட்டு உன்னை அறிந்து கொள்ளலாம் என்பார்கள் அது எப்பொழுதும் உண்மையான விஷயம், என்ன தான் நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்களை வைத்து தான் நம்மை எடை போடுவார்கள்.. என்னடா இவன் நட்பு நட்பு என மொக்கை போடுறான்னு திட்ட வேண்டாம்? இன்று ஞாயிற்றுகிழமை நண்பர்களுக்குரிய தினம்.. அதாங்க நம்ம நாளுங்க.. எப்படி காதலர்களுக்கு பெப்ரவரி 14 இருக்கோ, அது போல நமக்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை இருக்குங்க.. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை பிரண்ட்ஸ் நாளாக கொண்டாடும் பழக்கம் 1935 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகிறது, அந்த வருடம் அமெரிக்க காங்கிரசால் நண்பர்களுக்கான பொது விடுமுறையாக அறிவிக்க பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட பட்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் மற்றும் சில அமைப்புகளில் வேறு நாட்களும் நட்புக்குரிய நாட்களாக கொண்டாட பட்டு வருகின்றது.
நண்பர்கள் தினம் - ஆகஸ்ட் முதலாம் ஞாயிற்று கிழமை
பெண்களுக்குரிய நட்பு தினம் - ஆகஸ்ட் மூன்றாம் ஞாயிற்று கிழமை
சர்வதேச நண்பர்கள் மாதம் - பெப்ரவரி மாதம்
பழைய நண்பர்கள் புதிய நண்பர்கள் வாரம் - மே மாதம் மூன்றாம் வாரம்

இன்னும் சில நாடுகளில் ஜூலை இருபதாம் திகதியை நட்பு தினமாக கூறுகிறார்கள்.

நமக்கு நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சில பிரண்ட்ஸ் டே எஸ்.எம்.எஸ் கீழே தந்திருக்கிறேன் எடுத்து அனுப்பி உங்க நட்புகளை பெருமை படுத்துங்க..



----------------------------------------------------------------
A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights of ur friendship.
----------------------------------------------------------------

Friendship is never an accident...
it is something one has to nurture
over the years. I hope every year
our friendship becomes stronger

----------------------------------------------------------------

Friendship is not about finding similarities, it is about respecting differences. You are not my friend coz you are like me, but because i accept you and respect you the way you are.

----------------------------------------------------------------

Stars has 5 ends
Square has 4 ends
Trinagle has 3 ends
Line has 2 ends
but Circle of our friendship has no end.

----------------------------------------------------------------

Thank you for touching my life in ways you may never know. My riches do not lie in material wealth, but in having friend like you - a precious gift from God.

----------------------------------------------------------------

Good FRIENDS CaRE for each Other..
CLoSE Friends UNDERSTaND each Other...
and TRUE Friends STaY forever
beyond words,
beyond time...

----------------------------------------------------------------

What is a friend? She looks out 4 u, inspires u, laughs with u, cries with u, understands u, guides u and walks with u. That's what a friend is... u.

---------------------------------------------------------------



There is no Religion between Friendship
(\_/)
(=.=)
(")(")
This is for you...
Happy Friendship Day


---------------------------------------------------------------


A friend
is ALWAYS by your
side, to COMFORT
and GUIDE and bring
untold joys to LIFE



---------------------------------------------------------------


Friendship is a silent gift of nature..
More old .. more strong..
More deep.. more clear..
More close.. more warm..
Less words.. more understanding



---------------------------------------------------------------


Once u miss, u cannot join,that is Love .............
Once u join u cannot miss, thats Friendship............



---------------------------------------------------------------


Special number Stored in my Phone,
Special photos Fixed in my Album,
Special memories saved in my Brain,
Special Friend like u stays in my HEART



---------------------------------------------------------------


A Friend is a Hand Holding yours,
no matter how close or far apart you may be
---------------------------------------------------------------

என் உணர்வுகளை
என்னை விட நன்றாக
உணர்ந்த
உணர்கின்ற என் நட்புகளுக்கு
இந்த பதிவு சமர்ப்பணம்


====================================

இன்று சர்வதேச பிரண்ஷிப் தினம் (நட்பு தினம்). அதற்காக முன்பு நான் எழுதிய நட்பு தின பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

நட்புகள் தான் நாம் தினம் தினம் சுவாசிக்க எமக்கு தேவையான சக்தியை வழங்குகின்றன, நண்பன் இல்லாத மனிதனே இல்லை, நண்பன் இல்லாலிடின் அவன் மனிதனே இல்லை

Happy Friends Day to all my dearest friends.....

பாடசாலையில் மதக்கல்வி தேவையா?


டிஸ்கி -  இது யாரையும் புண்படுத்தும் பதிவல்ல, என் மனதிற்கு தோன்றியதை பதிவிடுகிறேன், முக்கியமான விடயம் நானும் ஒரு கடவுளை நம்பும் ஆத்திகன்.


சைவ மதத்தை பின்பற்றும் நான், தீவிரமாக கடவுளை வணங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன், சமயம் பற்றிய கல்வியை பாடசாலையில் விருப்பத்தோடு கற்றுள்ளேன். மதத்தை பற்றி கற்கும் போது பாடசாலையில் எனது மதமான இந்து மதத்தை கற்றேன், மேலும் எனது பள்ளி ஒரு கிறித்தவ பள்ளி என்பதால் சிறிதளவு கிறிஸ்வத அறிவும் கிடைத்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது இச்சமயக்கல்வி மாணவர்களிடம் சிறிய வயதிலே பிரிவினையை தூண்டி விடுவதாக தோன்றுகிறது. இன்று உலகலாவிய ரீதியில் ஏற்படும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் மதங்களும் ஒரு முக்கிய காரணம், மனிதர்களிடம் அன்பை வளர்க்க வேண்டிய மதமே மனிதர்களிடம் பிரிவினையை தூண்டுகிறது என்றால், அம்மதம் மக்களுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்து.

இதை நான் மற்றோருக்கு கூறும் போது, என்னை ஒரு மதத்துவேசியாகவே பார்க்கிறார்கள், காரணம் இங்கு அநேகமானோர் வாழ்வது மதத்திற்காகவே ஆகும். நான் கடவுளை நம்புபவன், ஆனால் நான் வணங்கும் இந்து கடவுள்தான் உலகத்தில் ஒரே கடவுள் மற்றைய எல்லா மதங்களும் பொய் என கூறவில்லை, இன்னுமொரு முக்கியமான விடயம் எனக்கு
மற்றைய மதங்களை விமர்சிக்க தார்மீக ரீதியில் உரிமையுமில்லை, காரணம் அவற்றை விமர்சிக்க கூடியளவுக்கு நான் அந்த மதங்களை கற்றவனல்ல, எனது வீட்டை சுத்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

“எனது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் அயலாரின் வீடும் சுத்தமாகும்” என்பதே எனது கொள்கை.

திருநாவக்கரசரை சைவ சமயத்தில் இணைந்ததற்காக சமணர்கள் பல விதத்தில் கொடுமைபடுத்தினார்கள் என்று சமய பாடத்தில் படிப்பித்ததை கொண்டு நான் சிறிய வயதில் மற்றைய சமயத்தவர் எல்லாம் கொடுமைக்காரர்கள் என்னும் கருத்தை கொண்டிருந்தேன், சற்று பெரிய வயது வந்ததன் பின்னரே சமயக்கல்வியை விட வாழ்க்கைக்கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன்,

மதம் என்னும் ஒன்று இல்லாவிடின் தனி மனிதனது ஒழுக்கம் கேள்விக்குறியதாகி விடுமென்பதாலும், மனிதன் யாருக்குமே பயப்படாவிடின் எதுவுமே செய்ய தயங்க மாட்டான் என்பதாலுமே முன்னோர்கள் மததை உருவாக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன், மதத்துக்காக மனிதன் என்றல்லாது மனிதனுக்காகவே மதம் என்றிருக்க வேண்டும்.அதாவது மதம் என்பது மனிதனுக்காக உருவாகப்பட்டது, அதுவே மனிதனை பிரிக்க காரணமாய் இருந்துவிட கூடாது என நினைக்கிறேன்.

தலைப்பில் உள்ளவாறு “மதக்கல்வி பாடசாலையில் தேவையா?” என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமானது, காரணம் சிறிய வயதில் மூளைக்கு செலுத்தப்படும் விடயம் கடைசி வரை அழியாது, ஆனால் இதில் இன்னாரு விடயமும் உள்ளது, நமது மதம் பற்றி எமக்கு அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.

அதனால் எல்லா மாணவருக்கும் ஒருங்கே எல்லா சமயமும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன், இப்படி கற்றுக் கொடுப்பதால் எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் இது மத ஒற்றுமையை வளர்க்கும் எனவும் நினைக்கிறேன், மேலும் சமயத்தை பரீட்சைக்கு என படிக்காமல் வாழ்க்கைக்கு என படிக்கும் நிலை வர வேண்டும் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டுங்கள், எனது கருத்து பிழை எனில் அதையும் தெரிவியுங்கள்.

பி.கு. இது ஒரு மீள்பதிவு, இன்று நண்பரொருவருடன் ஏற்பட்ட ஒரு கருத்து மோதலின் பின்னர் இதை மீள்பதிய எண்ணினேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. ஆனாலும் இன்றும் எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை

மலை மகுடம், வெற்றி FMக்கு நன்றி

காலையில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு கொண்டே எனது காலை வேலைகளை செய்யும் நான், மற்றைய நேரங்களில் வானொலி கேட்பது என்பது மிகவும் குறைவு. எனினும் வெற்றி FM இல் அடிக்கடி மலையக்திற்கான நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு விளம்பரபடுத்தியன் காரணமாக கடந்த சனிக்கிழமை மலைமகுடம் நிகழ்ச்சி கேட்டேன். அந்நிகழ்ச்சி சம்பந்மாக எனது கருத்துகளை எழுத முயற்சித்து அதிக ஆணிபிடுங்கல்களுக்கு மத்தியில் இப்போது எழுதுகிறேன்.

மலையக மக்களிற்கான ஒரு சமகால நிகழ்வுகளை வெளிப்படுத்தகூடிய/விமர்சிக்க கூடிய ஒரு நிகழ்ச்சி காலத்தின் கட்டாயமாகவே நான் காணுகிறேன். நாளின் பெரும்பகுதியை உழைப்பிற்காகவே செலவிடும் அம்மக்கள் படும் கஷ்டங்களை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். எனது அப்பா ஒரு தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தராக கடமை புரிந்ததாலும் மலையகத்திலிருக்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் கடமை புரிந்ததாலும் அம்மக்களின் பல பிரச்சினைகளை நேரடியாகவே கண்டிருக்கிறேன். இம்மக்களின் இப்பிரச்சினைகளை வெளி உலகிற்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குள்ளது. காரணம் இலங்கையில் ஒரு பக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை போன்றே பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு சமூகமும் இருப்பது பலருக்கு தெரியாததால் ஆகும்.

சம்பளப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை போன்றவற்றை வெளிக்கொணர்ந்த அந்நிகழ்ச்சியில் அடுத்து வரும் வாரங்களில் முடிந்தால் அப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மிக அடித்தட்டு மக்களிடம் பேசி அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்துங்கள். மலையகத்தில் குழந்தைகளின் குறை வளர்ச்சிக்கான காரணத்தை அறிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்த ஆய்வினில் பங்கு பற்றியுள்ளேன். எங்களது ஆய்வின் முடிவாக நாம் கண்டறிந்தது குறைவளர்ச்சிக்கான முக்கிய காரணம் பொருளாதாரம் மற்றும் குழந்தைகளுக்கான போசணை பற்றிய போதிய விளக்கமின்மை. 

தோட்ட மருத்துவமனைகளில் தமிழ் தெரியாத Mid-Wife பணிபுரிதல், தமிழ் தெரிந்தாலும் தாய்மார்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்லாமை, மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை தட்டிப்பறித்தல் போன்றவைதான் அதிகமாக குழந்தைகள் குறை வளர்ச்சியடைவதற்கான காரணமாகும். இங்கு நான் குறை வளர்ச்சி என்பது வயதிற்கு தகுந்த எடை மற்றும் உயரம் காணப்படாமை என்பனவாகும். 

மேலும் மலையத்தில் தோட்ட தொழிலாளர் தவிர்ந்த இன்னும் பல இந்திய வம்சாவளி தமிழர்கள் உண்டு. இவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கு வந்து இப்போது இலங்கையில் குடியேறியவர்கள். 

கல்வி பற்றி மலைமகுடத்தில் கூறிய சில விடயங்களை பார்க்கும் போது எனது பாடசாலை காலம் நினைவுக்கு வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பௌதீக, பொருளாதார காரணிகளை கொண்டு குறைந்த புள்ளிகளை பெற்றால் பல்கலைகழகம் என்னும் நிலை காணப்படுகிறது. இது சரியா பிழையா என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் இவ்வரபிரசாத்தினால் பயனடைவது தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளா என்பது கேள்விக்குறியே? 

நான் உயர்தரம் கற்கும் காலத்தில் வேறுமாவட்டத்தில் சாதாரண தரம் முழுவதும் படித்து, உயர்தரமும் கொஞ்சகாலம் படித்துவிட்டு எங்களது பாடசாலையில் இணைந்த இரண்டு மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவானார்கள், மிகவும் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் எனது பல்கலைகழக தெரிவை இழந்தேன்.  மேலும் 1 புள்ளியினால் பல்கலைகழக தெரிவை இழந்த மாணவனையும் அறிவேன். இப்போதும் இதே பிரச்சினை காணப்படுகிறதா என தெரியவில்லை. 

இந்நிகழ்ச்சியில் முடிந்தளவு இவ்வாறான மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்யுங்கள், அடிமட்டத்தில் வாழும் மக்களின் குரல்களை உலகிற்கு கொண்டு வாருங்கள். வாய்சொல் வீரர்களை விட அடிபட்ட மக்களின் குரல்களில் உள்ள துக்கம் ஆயிரம் கதை சொல்ல கூடியது. பாடல்களை கேட்கும் பத்தோடு பதினொன்றான நிகழ்ச்சியாக இல்லாமல் இலங்கை பொருளாதாரத்தின் அச்சாணியான இம்மக்கள், தங்கள் பொருளாதார பிரச்சினைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி மாற பிரார்த்திக்கிறேன்.

எனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)

இன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் எனக்கு பிடித்த சில இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இணையத்தில் தேடி ரசித்தேன். அப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
1. இளையநிலா பொழிகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், பாடும் நிலா S.P.B. யின் மனதை மயக்கும் இனிய குரலில் அமைந்துள்ள இப்பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை பற்றிய ஞானம் இல்லாத சிறிய வயதில் (இப்ப மட்டும் இருக்கா என்ன?) இப்பாடலை ரசித்திருக்கிறேன். கிட்டாரை ரசிப்பவர்கள் இப்பாடலை தவறவிட மாட்டார்கள். மனதில் ஏதாவது கவலைகள் இருக்கும் பட்சத்தில் இப்பாடலை கேட்டு கேட்டு என்னை புத்துணர்ச்சியாக்கிக் கொள்வேன்.


2. என் இனிய பொன் நிலாவே
     இதுவும் மனதை மயக்கும் கிட்டார் இசையை கொண்டுள்ள பாடலாகும். கங்கை அமரனின் அற்புத வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைஞானி, பாடலுக்கு தன் வசீகர குரலால் உயிர் கொடுத்திருப்பவர் K.J. ஜேசுதாஸ்.


3.பொன் மாலை பொழுது
கவிப்ரேரசை இசைஞானி தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்த பாடல், பாடலுக்கு S.P.B. தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார்.  வைரமுத்து தன் கவி வரிகளை இசைஞானியின் அற்புத இசையோடு சங்கமிக்க வைத்திருப்பார்.


4. மடை திறந்து தாவும் நதியலைதான்
இந்த பாடல் கொடுக்கும் உற்சாகம் சிறப்பானது, இளையராஜாவின் இசையில் எம்மை உற்சாகபப்படுத்த சிறந்த பாடல். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி மார்க்கண்டேயர் வாலி. பாடியவர் பாடும் நிலா S.P.B. இப்பாடல் சற்று காலத்திற்கு முன்னால் ரீமிக்சாகவும் அடுத்த தலைமுறையினரிடமும் வெளியாகி சக்கை போடு போட்டது.



5. காதலின் தீபம் ஒன்று
S.P.B.யின் குரலில் சூப்பர் ஸ்டாருக்காவே வடிவமைத்த மென்மையான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி. வரிகளுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.
6. மன்றம் வந்த தென்றலுக்கு
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. மீண்டும் இசைஞானி, பாடும் நிலாவின், கவி மார்க்கண்டேயரின் முக்கூட்டணி எம்மை ஆக்கிரமித்த பாடல்.


7. சங்கீத ஜாதி முல்லை
  கர்நாடக இசையறிவு அற்ற எனக்கே இப்பாடல் பிடிக்குமென்றால், கொஞ்சமாவது இசையை கற்றறிந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு அமுத சுரபியாக இருக்குமென நினைக்கிறேன். மீண்டும் இசைஞானி, வைரமுத்து, S.P.B.  போட்டி போட்டு பங்களித்திருப்பார்கள்.
8. சங்கீதம் கேளு
  இன்றுவரை இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி என்றே எண்ணியிருந்தேன். இன்று கூகுகிலாண்டவரிடம் தேடி பார்த்த போதுதான் இது இசைஞானியின் தமையனாரான கங்கை அமரனின் இசையில் வெளிவந்த பாடல் என அறிந்தேன். எனினும் இப்பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பாடலை பாடியவர் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்கள்.




9.பனி விழும் மலர் வனம்
இசைஞானி, வைரமுத்து, S.P.B. கூட்டணியின் மற்றுமொரு மகுடம். இரவு வேளைகளில் இப்பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள், சொர்க்கம் தெரியும்
10. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி 
நான் சிறுவனாக இருக்கும் போது வெளிவந்த இப்பாடல் இன்றும் எனக்கு பிடித்தமான பாடலாக இருப்பது இசைஞானியின் வெற்றி எனலாம். பாடலுக்கு குரல் கொடுத்தவர் சிறிய வயது பவதாரிணி. பாடல் வரிகள் கவி மார்க்கண்டேயர் வாலி என நினைக்கிறேன்.


பி.கு.- இன்னும் ஏராளமான பாடல்களை எழுதி கொண்டே போகலாம். ஆனாலும் 10 பாடல்களுடன் முடித்து கொள்கிறேன். இளமையெனும் புங்காற்று, நிலாவே வா, இதயம், புன்னகை மன்னன், இதயக்கோவில் என பட பாடல்கள் எழுத நினைத்தேன், நேரப்பற்றாக்குறை காரணமாக எழுதுவில்லை யாராவது விரும்பினால் தொடரலாம்

இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாளை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் எங்களது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உலக தமிழர்களை தலை நிமிர வைத்த ஒஸ்கார் தமிழனது பிறந்த நாளுக்கு வாழ்த்துவதில் நான் சந்தோஷமடைகிறேன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கப்பலில் நடந்த மன்மதன் அம்பு பட இசை வெளியீட்டு முன்னோட்டத்தில் மன்மதன் அம்பு பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தும் போது கமல் தெரிவித்த ஒரு கருத்து என்னை போன்ற ரகுமான் ரசிகர்களுக்கு மனவருத்தத்தை தந்தென்பதை மறுக்கவியலாது. “எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்னும் இருவருக்கு பிறகு தமிழ் திரையிசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய தகுதி தேவி ஸ்ரீ பிரசாத்திடமே உள்ளது என கமல் கூறினார். கமலுக்கு ரகுமான் என்னும் இசையமைப்பாளரின் சாதனைகள் மறந்துவிட்டதா இல்லை வேண்டுமென்றே ஒரு சாதனை தமிழனை புறக்கணிக்கிறாரோ தெரியவில்லை.

உலக அரங்கில் தன்னை நிரூபித்த இசைப்புயலை எம்மவர்கள் சிலர் புறக்கணிப்பது வருத்தத்திற்குறியதே. எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள் எவ்வாறு காலத்தால் அழியாததோ அதே போன்று ரகுமானின் இசையும் காலத்தால் அழியாததே. 

சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தும், ஏராளமான ஆங்கில பார்வையாளர்களுக்கு முன்னர் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தன செந்தமிழில் பேசிய ஆஸ்கார் நாயகன் நாளை ஜனவரி 6ம் திகதி தனது 45ம் அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இவ்வருடத்தை ஓய்வு வருடமாக அறிவித்துள்ள இசைப்புயல். ஓய்வின் பின்னர் பழைய போர்முக்கு திரும்பி எம்மை இசை மழையில் நனைய வைப்பார் என நம்பலாம்.

இசைப்புயல் இம்முறையும் ஆஸ்கார் விருது பெற்று எம்மை இன்னும் மகிழ்வடைய செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்

இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இசைப்புயலின் மனதை வருடும் இரு இசைக்கோலங்கள் கீழே



நூடுல்ஸ் (30-12-2010)

கடந்த வாரம் நத்தார் பண்டிகையை கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள், ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் வீட்டிலே அவர்களுடன் சேர்ந்து நத்தார் பண்டிகை கொண்டாடி வந்த எனக்கு இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தமே. வழமையாகவே நுவரெலியாவில் டிசம்பர் மாதங்களில் காணப்படும் தூறல், மூடுபனி, கடுங் குளிர் மற்றும் அங்கு கூடும் வெளி மாவட்ட மக்களின் எண்ணிக்கை என்பவற்றால் எமது பிரதேசம் மிகவும் அழகாய் காணப்படும். இவற்றை எல்லாம் இம்முறை மிஸ் பண்ணியது கவலையான விடயம்.

-----------------------------------------------------------------------

ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஆங்கில வானொலி அலைவரிசையான SUN FM, அரசியல் குத்து வெட்டுக்களின் பின்னர் மீள முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மீள தொடங்கவிருக்கும் SUN FM வானொலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------

பதிவர் ஜனா தனது மாத்தி யோசி என்னும் பதிவில் என்னை ஒரு ஆவிக்கதை எழுத சொல்லி அழைத்திருக்கிறார். எப்படி யோசித்தாலும் ஆவி வரவே மாட்டேங்குதே? ஆவியை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் தனியாகவும் நடந்து பார்த்தேன், ஆனாலும் அங்கு நான் ஆவிகளுக்கு பதிலாக பாவிகளையே கண்டேன். அந்த பாவிகளை பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன். அதற்கு முன்னர் ஜனாவின் விருப்பப்படி ஜனவரியில் ஆவிகளை பற்றி எழுத வேண்டும்.

-----------------------------------------------------------------------

ஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டனர் அவுஸ்திரேலிய அணியினர். அவுஸ்திரேலியர் சிகரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக கீழே விழுவர் என நான் எண்ணியும் இருக்கவில்லை. எனக்கென்னவோ அவுஸ்திரேலியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தேர்வுக்குழுவே என எண்ணத் தோன்றுகிறது. ஸ்மித் போன்ற வீரர்கள் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே கடினம், ஆனால் இவ்வாறான வீரர்களை தெரிவு செய்தது அவர்களது முக்கிய குற்றமாகவே படுகிறது. அடுத்த போட்டியில் பொன்டிங்குக்கு பதிலாக அணி தலைவராக பங்கெடுக்கும் கிளார்க் இழந்த மானத்தை ஒரளவாவது காப்பாற்றுவாரா என பார்ப்போம்.

-----------------------------------------------------------------------

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடருக்கு உயிரூட்டியிருக்கிறது, ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக நடுவர்களும் விளையாண்டனர் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரியும். UDRS முறையை இந்திய அணியினர் எதிர்த்தது இப்போட்டியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.  இந்திய அணி முதலாமிடத்தை பிடித்த இலங்கையுடனான தொடரின் முக்கிய போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டி இந்திய அணிக்கு சாதமாக மாறியது அனைவருமறிந்ததே.  சேவாக்குக்கு வழங்கப்படாத ஆட்டமிழப்பு, போர்மிலிருந்த டில்ஷானுக்கு இரண்டு இனிங்சிலும் வழங்கிய பிழையான ஆட்டமிழப்புக்களே இந்திய அணியை முதலாமி்டத்துக்கு கொண்டு சென்றது என நான் எண்ணுகிறேன்.


நான் இந்திய அணியின் எதிர்ப்பாளன் இல்லை, ஆனாலும் உலகில் எல்லா அணியும் ஏற்று கொண்டுள்ள தொழிநுட்பத்தை ஏற்க மறுத்தோடு மட்டுமல்லாது, தான் வேறு நாடுகளில் பங்கு பெறும் போட்டிகளிலும் அத்தொழிநுட்பத்தை பாவிக்கவிடாமல் பெறும் வெற்றியை 90சதவீதமான வெற்றியாகவே கருதவேண்டும். இந்திய அணியின் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுலாவின் போது நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. அத்தொடர் நடந்த காலங்களில் UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவுகள் மாறியிருக்கலாம் என்பதை இந்திய ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

-----------------------------------------------------------------------

ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் என்பார்கள், இப்போதுதான் ஆரம்பித்தது போன்றிருந்த இந்த 2010 வருடமும் முடிந்து விட்டது. வயதொன்றும் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு 2010 ஒரு நல்ல வருடமாக அமைந்தது. இதே போல் எதிர்வரும் 2011 வருடமும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக. “நம்பிக்கை தானே வாழ்க்கை”.

எதிர்வரும் 2011 சகலருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1

மறக்க முடியாத உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் என்னும் தொடரை இன்று முதல் எழுத எண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதை எழுதலாம் என்றிருக்கிறேன்


போட்டி - 1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் அரையிறுதி ஆட்டம்
அணிகள் - அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்
மைதானம் - மொகாலி
நாணய சுழற்சியில் வெற்றி - அவுஸ்திரேலியா


நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டெயிலர் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கிறார். முதலில் துடுப்பெடுத்தாட இந்த ஆடுகளம் சிறப்பானதல்ல என்பதை மேற்கிந்திய வேகபந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாக்கு உணர்த்தினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்த மார்க் வாஹ்வை கர்ட்லி அம்ரோஸ் ஓட்டம் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்தார், தொடர்ந்து மார்க்டெயிலர், ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். ஸ்டீவ் வாஹ் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்கள். இப்போட்டியில் வென்றால்தான் உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடலாம் என்னும் இக்கட்டான போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பை முறியடித்தனர் மேற்கிந்திய தீவுகளின் வேக பந்து வீச்சாளர்கள் அம்ரோசும் மற்றும் இயன் பிஷோப். 


பின்னர் ஆடுகளத்தில் இணைந்த அக்காலப்பகுதியில் ஆபத்பாந்தவனாக அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்கும் மைக்கல் பெவன் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் ஸ்டுவர்ட் லோ ஆகிய இருவரும்  ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கினர். இவ்விருவருக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டதுடன், இறுதி நேரத்தில் இறங்கிய இயன் ஹீலியின் அதிரடியான 31 ஒட்டமும் சேர அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு போராட கூடிய 207 என்னும் ஓட்ட எண்ணிக்கை கிடைத்தது.


208 என்னும் இலகுவான இலக்கினை நோக்கி ஆட தொடங்கிய மேற்கிந்திய அணிக்கு ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்று தந்தனர். அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிவ்நரின் சந்தர்போல் மற்றும் கோட்னி பிரவுண் ஆகியோர். எப்படியாவது ஒரு விக்கட் எடுக்க வேண்டும் என்று முயன்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலர் பவர்பிளே முடிய முன்னர் தனது மாயாஜால பந்து வீச்சாளரான ஷேன் வோர்னை அழைத்தார். மார்க் டெயிலரின் திட்டம் பலித்தது, தனது முதலாவது பந்திலேயே பிரவுணை ஆட்டமிழக்க செய்தார் ஷேன் வோர்ன். அதன் பின்னர் இணைந்து ஆட தொடங்கிய இடது ஆட்டக்காரர்களான லாரா மற்றும் சந்தர்போல் போட்டியை மேற்கிந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டு செல்ல சிறப்பாக ஆடினர். வேகமாக 45 ஓட்டங்களை பெற்ற பிரையன் லாராவின் முக்கியமான விக்கட்டை ஸ்டீவ் வாஹ் வீழ்த்துகையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட் இழப்புக்கு 93. தொடர்ந்து அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனும் சந்தர்போலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163வரை கொண்டு சென்றனர். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறப்பாக விளையாட இயலாத சந்தர்போல் கிளன் மெக்ராவின் பந்து வீச்சில் பிளமிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் போது ஓட்ட எண்ணிக்கை 165. அவர் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 80. இன்னும் 9 ஓவர்களின் 43 ஓட்டங்களை பெற வேண்டும், கைவசம் 7 விக்கட்டுகள் உள்ளன, மேலும் அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் என்பதால் இலவாக இப்போட்டியை வென்று விடலாம் என மேற்கிந்திய அணி எண்ணியிருக்கையில் அடுத்த விக்கட்டையும் வீழ்த்துகிறார் கிளன் மெக்ரா. எனினும் ஆட்டமிழந்த வீரர் ரொஜர் ஹாப்பர், இவர் ஒரு பந்துவீசும் வீரராகவே அறியப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளத்தில் இறங்கிய சகலதுறை வீரர் ஒட்டிஸ் கிப்சன் வோனின் மாயசுழலில் மாட்டி விக்கட் காப்பாளர் ஹீலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 178. தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ஜிம்மி அடம்ஸை ஓட்டம் பெற முன்னர் ஷேன் வோர்ன் ஆட்டமிழக்க செய்ய, தொடர்ந்து ஆட வருகிறார், ஒற்றைகையால் ஆறு ஓட்டங்களை அடிப்பதில் கில்லாடியான கீத் ஆர்த்தட்டன். இவரை ஒரு சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்கிறார் டேமியன் பிளமிங். Attacking Field Setting செய்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டம் பெற முடியாதவாறு செய்த அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலருக்கு ஆதரவா சிறப்பாக பந்து வீசினர் அவ்வணி பந்து வீச்சாளர்கள். முக்கியமாக ஷேன் வோர்ன் தனது கடைசி 3 ஓவர்களில் ஆறு ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை பெறுகின்றார்.  ஆனாலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கும் தலைவர் ரிச்சி ரிச்சட்சன் கடைசி ஓவரை முகம் கொடுக்கும் போது அணியின் வெற்றிக்கு தேவையான ஓட்ட எண்ணிக்கை 10. மீதமுள்ள விக்கட்டுகளின் எண்ணிக்கை 2.  இறுதி ஓவரை வீச மார்க் டெயிலர் பந்தை டேமியன் பிளமிங்கிடம் கொடுக்கிறார்.


முதலாம் பந்து - மிட் விக்கட் திசையில் அப்பந்தை அடித்து ஆடிய ரிச்சட்சன் 4 ஓட்டங்களை பெறுகிறார். இன்றும் 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை.


இரண்டாம் பந்து - ரிச்சட்சனின் துடுப்பில் உள்பகுதியில் பட்ட பந்துக்கு ஓட்டம் பெற முயன்றனர் அம்ரோசும், ரிச்சட்சனும். பந்தை எடுத்த ஹீலி விக்கட்டை நோக்கி எறிகிறார். மூன்றாம் நடுவரின் தீர்ப்பின்படி அம்ரோஸ் ஆட்டமிழக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இன்னும் நான்கு பந்து களில் 6 ஓட்டங்கள் தேவை. பந்தை எதிர் கொள்ள வந்திருப்பவர். உலகில் அதிக முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த வீரர் என்னும் சாதனையை கொண்டிருந்த வீரர் கோட்னி வோல்ஷ்


மூன்றாம் பந்து - கிளீன் போல்ட். பிளமிங் விக்கட்டை நோக்கி வீசிய பந்தை கோட்டை விட்ட வோல்ஷ் உலக கிண்ண கனவையும் கனவாகவே மாற்றிவிட்டார். மறுபுறத்தில் 49 ஓட்டங்களுடன் அணிதலைவர் ஆடுகளத்தில் இருந்தும் போட்டியை 5 ஓட்டங்களால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி


ஸ்கோர் சுருக்கும் 


அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 207 ஓட்டங்கள்
 துடுப்பாட்டத்தில் மைக்கல் பேவன் - 69, ஸ்டுவர்ட் லோ - 72, ஹீலி - 31
 பந்து வீச்சில் அம்ரோஸ் 26/2, பிஷப் 35/2


மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள்

  துடுப்பாட்டத்தில் சந்தர்போல் - 80, லாரா - 45, ரிச்சட்சன் - 49 ஆட்டமிக்காமல்
   பந்து வீச்சில் ஷேன் வோர்ன் 36/4, பிளமிங் 48/2, மக்ரா 30/2

 போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வோர்ன்



குறிப்பு - இப்போட்டியை மறக்காமைக்கு இன்னொரு முக்கிய காரணம், எனது விருப்பத்துக்குறிய வீரர்களில் ஒருவரான ரிச்சி ரிச்சட்சனின் இறுதி சர்வதேச போட்டி இதுவென்பதாலாகும்.

நூடுல்ஸ் (22-12-2010)

பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும்? ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்க உதவும்.

கிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.
------------------------------------------------
மூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.

எதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன?
------------------------------------------------

மலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம்? இவனெல்லாம் ஒரு ஆசிரியனா? த்த்த்தூதூ

போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
------------------------------------------------
ஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை

இந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.
------------------------------------------------
கிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.
------------------------------------------------
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு

“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா 
தானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா"

"சாம, தான, பேத,  தண்டம் நாலும் சேர்ந்து 
தோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்  "

இவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன். 
------------------------------------------------

இம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
------------------------------------------------
பத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.

கிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்

இலங்கை தமிழ் பதிவர்கள் ஆடிய கிரிக்கட் போட்டி இனிதே கடந்த வார இறுதியில் நடந்து முடிந்தது, அது பற்றிய முழு விபரங்களை லோஷனின் பதிவில் வாசித்திருப்பீர்கள், வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் வாசிக்கலாம்


*நிரூஜா எனப்படும் மாலவன் எங்களது அணிக்கு தலைவராகவும், அனுதினன் மற்றைய அணிக்கு தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். நாணய சுழற்சியில் நாங்கள் தோற்று களத்தடுப்பை தேர்வு செய்தோம் (வென்றிருந்தால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருப்போம் என்பது வேறு விடயம்.)

* எமது ஆரம்ப பந்து வீச்சாளர்களான மருதமூரான் மற்றும் சி.பொ. கோபிநாத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஒட்டங்களை பெற்ற அனுதினன் அணியினர், 11 வருடங்களுக்கு பின்னர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்த ஜனாவின் அதிரடியோடு வேகமாக ஒட்டங்களை பெற்றனர், லோஷன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி அவ்வணியினரின் ஓட்டங்களை 93ஆக கட்டு படுத்த உதவினார். தொடர்ந்து ஆடிய எமது அணியினர் ஆரம்பத்தில் சிறப்பான அடித்தளத்தை இட்டாலும் தொடர்ந்து விக்கட்டுகள் சரிய நானும், சி.பொ. கோபிநாத்தும் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வழங்கினோம், எனினும் நான் தேவையற்ற விதமாக தலைக்கு மேல் சென்ற பந்தை பைன்லெக் பக்கமாக திருப்ப முயற்சிக்க அது Top Edge ஆக மாறி வரோவினால் பிடியெடுக்கப்பட்டதும், கோபிநாத் முக்கியமான தருணத்தில் ரன்அவுட் ஆனதாலும் போட்டியை நாம் 6 ஓட்டங்களால் தோற்க நேரிட்டது. தலைவர் அனுதினன் 4 விக்கட்டுகளை எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். திருமலைக்குஞ்சு பவனும் சிறப்பாக பந்து வீசினார்.

*முதலாம் போட்டியில் தோற்றதால் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்னும் உத்வேகத்தோடு நாம் இரண்டாவது ஆட்டத்தில் மைதானத்தில் இறங்கினோம். முன்னைய போட்டியோடு ஒப்பிடுகையில் இம்முறை சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் களத்தடுப்பில் பல பிடிகளை விட்டு எமது உலக தரத்தை வெளிக்காட்டினோம். கடந்த போட்டியில் 4 விக்கட்டுகளை எடுத்த லோஷன் இம்முறை 5விக்கட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக அனுதினன் அணியினர் 79 ஒட்டங்களுக்கு கட்டுபடுத்தினோம். (அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர் ஜனாவின் பிடியை பல கிலோமீற்றர் ஒடி சென்று பிடித்த யோகாவின் அதி சிறந்த பிடியும் ஓட்ட எண்ணிக்கையை மட்டுபடுத்த ஒரு முக்கிய காரணம் என கிரிக்இன்போவில் ரிச்சி பேனோ சொல்லியிருக்கிறார்), மேலும் பால்குடி மற்றும் வதீஸ் ஆகியோரின் 2 சிறப்பான பிடிகளும் எங்களுக்கு விக்கட்டுகளை பெற்று தந்தன. இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தரமுயர்த்தப்பட்ட கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி எமது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்ற கோபிநாத்தோடு லோஷனும் போட்டியின் முடிவுவரை களத்தில் இருந்தனர். 

டிஸ்கி
* போட்டோ போட்டு எல்லாரையும் கலாய்க்கும் பவன் மைதானத்தில் அமைதியின் சிகரமாய் இருந்தார்.

* தரங்கம் புகழ் சுபாங்கன் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என மகிழ்ந்திருந்தால் அப்பந்தை மது பிடியெடுத்து சிக்சரை விக்கட்டாக மாற்றினார். 

* அனலிஸ்ட் கோபி அனுதினனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு ரொக்கட் விட்டார்.

* பிரபல வேக பந்து வீச்சாளர் யோகா (நான்தான்) வீசிய அதிகமான பந்துக்கள் புல்பிட்சாகவே சென்றது.

* கூல் போய் பந்து தடுக்கும் இடங்களுக்கு பந்து செல்லவேயில்லை, காரணம் ஏதேனும் ஸ்பொட் பிக்சிங்கா?

* மருதமூரானின் பந்து வீச்சு பாணி மிக அழகாக இருந்தது, போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகைகள் அனைவரும் அவரையே வைத்த கண் பார்க்காமல்  பார்த்து ரசித்தனர். (வந்திருந்தால்)

* போட்டிக்காக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பதிவர்கள் வந்திருந்தது போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு அதிக உந்து சக்தியை வழங்கியது என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க இவர்கள் முயல்வார்கள் என நினைக்கிறேன்

* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததை போல், நானும் அனலிஸ்ட் கன்கொன்னின் உதவியுடன் மைதானத்தை கண்டறிந்தேன். அதற்கு முதல் நாள் இரவு பெய்த மழையால் விளையாட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டே கன்கொன் விடிய விடிய தூங்கமலிருந்ததாக பதிவுலீக்ஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

* நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக வந்த “மதுயிசம்” புகழ் மதுவுக்கு மின்சார இணைப்பை மைதானத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனாலும் தடைகற்களை எல்லாம் படிக்கல்லாக மாற்றிய மது போட்டியை செவ்வனே நேரடியாக ஒளிபரப்பினார். (இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பானதால் ஸ்டார் கிரிக்கட் சமகாலத்தில் ஒளிபரப்பிய ஆஷஸ் போட்டியை பலர் பார்க்காமல் விட்டு அவ் அலைவரிசைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது வேறு விடயம்). இங்கிலாந்திலிருந்து எமது ஆட்டத்தை ரசித்த பதிவர் வந்தி அடிக்கடி எம்மோடு அரட்டையிலும் ஈடுபட்டார்.


நான் துடுப்பெடுத்தாடும் ஒரு காட்சி.

இரண்டாவது போட்டியில் வென்ற எமது அணியினர் மகிழ்ச்சியுடன்

முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியினருடன் சேது ஐயா அவர்கள் உரையாடுகிறார். எமது அணியை சேர்ந்த லோஷனும் உரையாடலில் பங்கெடுக்கிறார்

நூடுல்ஸ் - 08 -12 - 2010

ரொம்ப நாளாக தொய்வுநிலையில் இருந்த இலங்கை தமிழ் பதிவுலகம் கடந்த ஒரு வாரமாக மீளவும் உற்சாகமாகி பழைய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம், அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பின் பின்னர் இன்னும் அதிக பதிவுகள் வெளிவரும் என்தில் எவ்வித ஐயமுமில்லை, காரணம் கடந்த இரண்டு பதிவர் சந்திப்புகளின் பின்னரும், சர்ச்சைக்குரிய “இருக்கிறம்” சந்திப்பிற்கு பின்னரும் எம்மவர்களின் பதிவுகள் அதிகரித்ததை யாமறிவோம்.

------------------------------------------------

ஆஷஷில் இங்கிலாந்திற்கு சவாலாக இருக்கவேண்டிய அவுஸ்திரேலிய அணியினர் இப்படி பல் புடுங்கிய பாம்பாக இருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது, அதிலும் Punter சொதப்புவது அவரது தீவிர ரசிகர்களுக்கு (எனக்குதான்)  ஏமாற்றமளிக்கிறது.கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக தர வரிசையில் முதல் 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் அவர் இடம் பெறாமையானது அவரது சொந்த போர்ம் சிறப்பாக இல்லாமையை காட்டுகிறது. உலக கிண்ணத்திற்கு முன்னர்அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், அப்போதுதான் விறுவிறுப்பான உலக கிண்ண போட்டிகளை பார்க்கலாம். 

------------------------------------------------

இந்திய அனுபவமிக்க டெஸ்ட் அணி நியுசிலாந்தோடு தடுமாறி தொடரை வெல்ல, அனுபமற்ற இந்திய ஒரு தின அணி நியுசிலாந்தோடு கலக்கலாய் ஆடி தொடரை வென்றதும் இந்திய அணியின் Bench Strength ஐ காட்டுகிறது.

------------------------------------------------

எங்களது கண்டியில் புது மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது, போய் பார்ப்போமென்றால் வருண பகவான் எங்களுக்கெல்லாம் எதிரியாய் வந்து எங்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிவிட்டார். உள்ளக கிரிக்கட் போட்டி தொடர்தான் தற்போது இலங்கையில் விளையாடலாம் என நினைக்கிறேன்.

------------------------------------------------

“மன்மதன் அம்பு” பாடல்கள் கேட்டேன், அதிலும் கமலின் கவிதை வரிகள் கேட்டு நிரம்ப ரசித்தேன், இந்த மனுஷனுக்குள் எத்தினை திறமைகள்? “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது. வழமையாகவே கமலின் பேட்டிகளை மிகவும் ரசிக்கலாம், காரணம் அதிகமாக கமல் யாருக்கும் “வாளி” வைப்பதில்லை.

------------------------------------------------

வெற்றியின் விடியல் கேட்டு நாளை ஆரம்பிக்கும் நான் தற்போது வானொலியே கேட்பதில்லை ஏனெனில் முன்னர் FM 105.1 இல் ஒலிபரப்பாகிய வெற்றி FM இப்போதெல்லாம் அவ்வலைரிசையில் ஒலிபரப்பாவதில்லை என நினைக்கிறேன். லோஷன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

------------------------------------------------

உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருவர் கொழும்பை சேர்ந்தவர்கள், மற்றைய இருவரும் ரம்புக்கன மற்றும் குளியாபிட்டியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்வான விடயம், வெளி மாவட்ட மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஆரோக்கியமான விடயம். இதில் இன்னொரு விடயம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

------------------------------------------------

முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் போடப்பட்ட முதல் பட பதிவு என்னுடையதுதான் என நினைக்கிறேன். அதில் எனக்கு தமிழிசில் பலவாக்குகளை அள்ளி குவித்த லோஷன் + நயன்தாரா படம் கீழே. 


Facebook Badge