நூடில்ஸ் (01.09.2010)


01நான் ADSL இணைய இணைப்பை பாவித்துவந்த நான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து Mobitel Broadband இணைய இணைபுக்கு மாறிவிட்டேன், மார்ச் மாதம் வாங்கிய இணைப்புக்கு இதுவரை ஒரு கட்டண பட்டியலையும் மொபிடெல் நிறுவனம் எனக்கு அனுப்பவில்லை, ஏதோ போனால் போகட்டும் என ஒவ்வொரு மாதமும் இணைய பாவனைக்கு என ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி வந்தேன், இடையில் மொபிடெல் நிறுவனத்திற்கு சென்று இரு முறையும், தொலைபேசியில் ஒரு முறையும் எனக்கு பில் வரவில்லை என முறையீடும் செய்திருக்கிறேன், ஒவ்வொருமுறையும் அவர்கள் பில்லை தபாலில் அனுப்பியிருக்கிறோம், வராதது ஏனென பார்க்கிறோம் என நம்பிக்கையளிக்கும் வகையில் பதிலளித்தனர்


திடீரென கடந்த வாரம் எனது இணைய இணைப்பு இயங்கவில்லை கஸ்டமர் கெயாரை தொடர்பு கொண்டால் நான் கட்டணம் செலுத்த தவறியதால் எனது இணைப்பை துண்டித்து விட்டார்களாம், எவ்வளவு கட்டணம் என அறியாமல் எப்படி செலுத்துவதாம்? நேற்று தொடர்பு கொண்ட போது நான் ஈ-பில்லிங் (e-Bill) சேவையை தெரிவு செய்திருப்பதால் எனக்கு பில் அனுப்பவில்லை என சொன்னார்கள், அது எப்பவொ நான் முயற்சி செய்து பார்த்து மறந்து போனது, எனது பிரச்சினை என்னவென்றால் ”அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு எனக்கு பில் வராததன் காரணத்தை கண்டுபிடிக்க 3 மாதம் ஆனதா?“ என்பதாகும். இதற்கே இப்படி என்றால் வேறு பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பின் என்ன செய்வார்கள்? இந்த பிரச்சினையால் நான் வேறு ஒரு நிறுவன இணைய இணைப்புக்கு மாற யோசித்துள்ளேன்

------------------------------------------------------------------------------------------------------
சம்பின்ஸ் லீகில் இலங்கை வயம்ப அணிக்கு அனுசரனை வழங்குவதற்கு பாலியல் ஊக்குவித்தல் தொடர்பான மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனம் முன்வந்திருப்பது பலரது அதிருப்தியை சம்பாதித்துள்ளது.  என்னை கேட்டால் நானும் இது வேண்டாமென்றெ சொல்லுவேன், காரணம் அதிக பணம் கொடுப்பதற்காக யாரையும் ஏற்று கொள்ளலாமென்றில்லை. இவ்வாறான அதிக பணம் மீதான மோகமே பாகிஸ்தான் வீரர்களை லஞ்சம் வாங்கி ஸபொட் பிக்சிங் (தமிழ் வார்த்தை யாதோ?) செய்ய வழிவகுத்துள்ளது. ஆகவே பணமே விளையாட்டு என்பதை ஊக்குவிக்காமலிருக்க வேண்டும், இலங்கை கிரிக்கட் சபை இதை செய்யுமா?
------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த “அறிந்ததும் அனுபவமும்” பதிவரும், சக்தி வானொலி அறிவிப்பளருமான டயானா சதாசக்திநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
------------------------------------------------------------------------------------------------------
உயர்தர பரீட்சையின் போது பரீட்சை திணைக்களம் விட்ட தவறுகளால் பரீட்சை எழுதவியலாமல் போன இரு மாணவர்களை நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் பார்க்க கிடைத்தது, இனி எவ்வளவுதான் மன்னிப்பு கேட்டாலும் இழந்து போன அம்மாணவர்களது பரீட்சை கனவு நனவாகாது என்பது கசப்பான உண்மை கடந்த காலங்களில் வினாதாள்களில் தவறுகளை விட்ட பரீட்சைகள் திணைக்களம், இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது கண்டிக்கதக்கது, சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

உயர்தர பரீட்சை பற்றிய இன்னொரு செய்தி, ஒரு மாணவி பரீட்சைக்கு விடையளிக்க நேரம் போதாமையால் தற்கொலை செய்து கொண்டாள் என்பது, இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தற்கொலை செய்வது தற்போது அதிகமாகிவிட்டது வருந்தத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------
நேற்று மூட் சரியில்லை என மூஞ்சிப்புத்தகத்தில் ஸ்டேஸ் போட்டு சில நேரத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிவாக பேசிய நண்பர் பதிவர் “சிதறல்கள்” ரமேசுக்கு  எனது நன்றிகள், மே மாதம் எனது இணைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டவுடன் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு உதவிய பதிவுலக நண்பர்கள, நேற்று தொடர்பு கொண்ட பதிவர் என பல சிறந்த நண்பர்களை தந்ததற்கு பதிவுலகிற்கு நன்றி சொல்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------
இனிமேல் கிரிக்கட்டில் நடுவர்கள் இப்படிதான் இருக்க வேண்டி வருமோ?


Facebook Badge